Begin typing your search above and press return to search.
கொரோனா விழிப்புணர்வு - ஆட்டோவில் அட்வைஸ்.
மாவட்ட காவல் நிலைய பகுதிகளில்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.மணிவண்ணன் உத்தரவுப்படி, மாவட்ட காவல் நிலைய பகுதிகளில், பொதுமக்களிடையே முழு ஊரடங்கு குறித்து விளக்கி கூறினர்
ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், மிக அவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்பொழுது ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு முககவசம் வழங்கி முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளி கடைபிடித்தல் அவசியம் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.