/* */

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு
X
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் சபாநாயகர் அப்பாவு.

மத்திய அரசின் நீர்வளத் துறை மற்றும் ஆறுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் 2009 ல் தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின் போது தினமும் 3200 கன அடி வீதம் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளுக்கு கால்வாய் மூலம் திருப்பி விடும் திட்டம் இது.

தாமிரபரணியில் இருந்து பிரியும் புதிய கால்வாயுடன் பச்சையாறு, கருமேனியாறு, நம்பியாறு ஆகியவற்றையும் இத்திட்டம் இணைக்கிறது. அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் துவங்கி திசையன்விளை அருகே எம்.எல்.தேரி வரையிலும் 75 கி.மீ.க்கு தாமிரபரணி நதி நீரை கொண்டு செல்வதாகும். இந்த திட்டத்தின் 3 ஆம் கட்ட பணிகளை தமிழக சபாநாயகர் அப்பாவு அதிகாரிகளுடன் கோட்டைகருங்குளம் மற்றும் மன்னார்புரம் பகுதிகளில் நடைபெறும் பணிகளை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்பு பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

Updated On: 29 March 2022 12:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...