/* */

நெல்லையில் புனித சவேரியார் பேராலயத்தில் ஞாயிறு குருத்து பேரணி

தெற்குபஜார் புனித சவேரியார் பேராலயத்தில் ஞாயிறு குருத்து பேரணியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலையை கையிலேந்தி ஓசன்னா பாடல் பாடி சென்றனர்.

HIGHLIGHTS

நெல்லையில் புனித சவேரியார் பேராலயத்தில் ஞாயிறு குருத்து பேரணி
X

பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தில் குருத்து ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு கையில் குருத்தோலையுடன் ஒசனா பாடல் பாடி சென்றனர். கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் 2- ந்தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தையுடன் தொடங்கியது. அன்று முதல் அசைவ உணவு, ஆடம்பர செலவுகளை தவிர்த்து எளிய முறை வாழ்வை மேற்கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தவக்காலத்தில் புனித வாரத்தின் தொடக்க விழாவாக குருத்து ஞாயிறு கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு பாடுகளை ஏற்று மனித குலத்தை மீட்பதற்கு அரசர்க்கு உரிய மரியாதையுடன் ஜெருசேலம் நகருக்குள் நுழைவதை நினைவுபடுத்தும் விதமாக இந்த குருத்து ஞாயிறு நடைபெறுகிறது.

இதனையொட்டி பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தில் பங்கு இறைமக்கள் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி சென்றனர். புனித குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி புனித யோவான் கல்லூரி வாட்டர் டேங்க் வழியாக சென்று மீண்டும் புனித சவேரியார் பேராலயத்தை வந்தடைந்தனர். பேரணியில் சென்றவர்கள் கையில் குருத்தோலையை ஏந்தி ஒசனா பாடல்களை பாடி சென்றனர். தொடர்ந்து வரும் 14- ந்தேதி பெரிய வியாழன் பிரார்த்தனையும், 15- ந்தேதி புனித வெள்ளி பிரார்த்தனையும் நடைபெறுகிறது.

Updated On: 10 April 2022 5:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  4. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  5. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  6. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  7. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  9. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்