/* */

கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆட்டை 'ஆட்டைய' போட்ட மர்ம நபர்கள்

களக்காடு அருகே குலதெய்வ கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆட்டை திருடிய மர்ம நபர்கள். சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை

HIGHLIGHTS

கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆட்டை ஆட்டைய போட்ட மர்ம நபர்கள்
X

ஆடு திருடிய காட்சி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கோவிலம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைகண்ணு. பலசரக்கு கடை நடத்தி வரும் இவர் தனது குல தெய்வத்திற்கு காணிக்கை செலுத்துவதற்காக கடந்த 3 ஆண்டுகளாக கிடா ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு சுமார் 30 கிலோ எடை வரை இருக்கும்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் இவரது வீட்டு முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டை பைக்கில் வைத்து திருடி சென்று விட்டனர்.

மர்ம நபர்கள் ஆட்டை திருடிய காட்சிகள் அனைத்தும் அவரது வீட்டின் முன்பு இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ஆடு திருடு போனது குறித்து களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சிசிடிவி வீடியோ காட்சியை வைத்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 March 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!