முக்கூடல் அருகே குழந்தை விற்பனை: பணத் தகராறில் அம்பலமானது

முக்கூடல் பகுதியில் குழந்தைகளை விற்று பணம் பெற்றதில் மூன்று பேருக்கு தகராறு ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
முக்கூடல் அருகே குழந்தை விற்பனை: பணத் தகராறில் அம்பலமானது
X

மையிலப்புரம் 

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மையிலப்புரம் மேட்டு தெருவில் திருப்பூரைச் சேர்ந்த தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வியாகம்மாள் மேரி, மார்க்ரெட் தீபா ஆகியோருடன் சேர்ந்து 6 மாதத்திற்கு முன்பு தேவி தனது மகள் தர்ஷனாவை (வயது 2) ஜான் எட்வர்ட் - அற்புதம் என்ற தம்பதியிடம் விற்பனை செய்துள்ளனர்.

இந்த நிலையில், தேவி இரண்டு மாதமே ஆன தனது இரண்டாவது குழந்தையை விற்பனை செய்வதற்காக தென்காசியை சேர்ந்த அமலா பாத்திமா மற்றும் ஜெபஸ்டின் ஆகியோருடன் பேரம் பேசியுள்ளனர். அப்போது தேவி, வியாகமால், மார்க்ரெட் தீபா இவர்கள் மூவருக்கும் பணம் பிரிப்பது சம்பந்தமாக பிரச்சனை ஏற்படவே குழந்தைகள் விற்பனை செய்த விஷயம் அம்பலமாக தொடங்கியது. இந்த விஷயம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைக்கவே முக்கூடல் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேவியிடம் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குழந்தை விற்பனை செய்தது உறுதியானது. தர்ஷனா என்ற 2 வயது குழந்தையை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2021-08-26T15:19:47+05:30

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்