/* */

காந்தி ஜெயந்தி: மரக்கன்று வழங்கிய மக்கள் சக்தி இயக்கம்

காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரக்கன்றுகள் வழங்கினர்

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தி:  மரக்கன்று வழங்கிய மக்கள் சக்தி இயக்கம்
X

காந்தி சிலைக்கு கதர் ஆடை போர்த்தி மரியாதை செலுத்தினர்

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் காந்தி ஜெயந்தி ஜெயந்தி நிகழ்ச்சியை இன்று காலை 10.00 மணியளவில் பொன்மலையில் கொண்டாடினர் . இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ தலைமை தாங்கினார்.

இதில் மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், கலைக்காவிரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும், தண்ணீர் அமைப்பு செயலாளருமான தி. சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொன் மலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலைக்கு பதிலாக "கதர் ஆடைகளை உடுத்துவோம்: நெசவாளர்களை உயர்த்துவோம் " என்ற நோக்கத்தில் கதர் ஆடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

காந்தி பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இயற்கையை பாதுகாக்க வேண்டி அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது . மேலும் உன்னதமான தமிழகம் காண , முழுமையான மது விலக்கை ஆதரீப்பீர் , என விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.

நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்க மாநகர நிர்வாகி விஜயகுமார் , மகளிர் அணி கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன் , லலிதா, நரேஷ்குமார் , வெங்கடேஷ், தயானந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு