/* */

திருச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உபி சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

 உபி சம்பவத்தை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேசத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார்களை ஏற்றியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் 8 விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார். இதில், ஜனநாயக சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் சம்சுதீன், மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலாளர் ஜீவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில விவசாய சங்க துணை செயலாளர் இந்திரஜித், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சுரேஷ், சமூக நீதிப் பேரவை மாவட்ட செயலாளர் ரவிக்குமார், தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ரெங்கராஜன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படுகொலை சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் கோஷங்களாக எழுப்பப்பட்டது.

Updated On: 4 Oct 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!