Begin typing your search above and press return to search.
திருச்சி மத்திய மண்டல ஐஜியாக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு
திருச்சி மத்திய மண்டல ஐஜியாக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
HIGHLIGHTS
சென்னை கிழக்கு டிஐஜியாக இருந்தபாலகிருஷ்ணனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு. திருச்சி மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார்.
இவர் ஏற்கனவே திருச்சி டிஐஜியாக பணியாற்றியவர். கொரோனா ஊரடங்கு காலத்தின் போது மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் உதவியின்றி வசித்து வரும் மூத்த குடிமக்களை கண்டறிந்து காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்ட பாலகிரஷ்ணன் இன்று மாலை பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.