/* */

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு திருச்சி கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவு

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

HIGHLIGHTS

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு   திருச்சி கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவு
X

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சின்னவேலகா நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் தேஜாஸ்ரீ ( வயது 7 ). இவர் முசிறி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3–ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் . கடந்த 2017–ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதியன்று வீட்டில் இருந்து வேனில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார் . அப்போது முசிறி காமாட்சிப்பட்டி ரோடு அருகே வந்த போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது . இந்த விபத்தில் தேஜாஸ்ரீ படுகாயமடைந்து இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அப்போது முசிறியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜெயசித்ரா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார் . இது தொடர்பான வழக்கு திருச்சி முதலாவது சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா நேரில் ஆஜராகி சாட்சி அளிப்பதற்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதனை தொடர்ந்து நீதிபதி வேதியப்பன் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ராவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார் . தற்போது ஜெயசித்ரா பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Updated On: 6 Oct 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  5. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  7. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  8. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  9. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  10. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்