/* */

பல்கலைக்கழக அளவிலான போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன்

பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி சாம்பியன் பட்டத்தை வென்றது.

HIGHLIGHTS

பல்கலைக்கழக அளவிலான போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன்
X

சாம்பியன் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியினருடன் முதல்வர் உள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி புதுகை, சிவபுரம், ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், வாலிபால் போட்டி திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்திலும் நடைபெற்றது.

டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, குடந்தை இதயா மகளிர் கல்லூரியை 3-1 என்ற செட் கணக்கில் வென்று முதல் இடம் பிடித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.

மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி, திருச்சி காவேரி மகளிர் கல்லூரியை 3-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரியை என்ற 25-15, 25-10 புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவியர்களுக்கான வாலிபால் போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்தது.

மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் குடந்தை அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடந்தை அரசு மகளிர் கல்லூரியை 25–15, 25–17, என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

டேபிள் டென்னிஸ் போட்டி மற்றும் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியர்களை கல்லூரி முதல்வர் டி.பால்தயாபரன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் பாராட்டினார்கள்.

Updated On: 10 Dec 2021 1:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...