/* */

திருச்சி சரகத்தில் திருடர்களிடமிருந்து 60 ஆடுகளை மீட்டது தனிப்படை

திருச்சி சரகத்தில் கடந்த 5 நாட்களில் ஆடு திருடர்களிடமிருந்து 60 திருட்டு ஆடுகளை தனி போலீஸ் படை மீட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி சரகத்தில் திருடர்களிடமிருந்து 60 ஆடுகளை மீட்டது தனிப்படை
X

பைல் படம்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி) பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் (டி.ஐ.ஜி) சரவணசுந்தர் மேற்பார்வையில் கடந்த 23-11-2021-ந் தேதி ஆடு திருடும் நபர்களை பிடிப்பதற்காக 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்களை உள்ளடக்கிய தனிப்படை திருச்சி சரக அளவில் அமைக்கப்பட்டது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆடு திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 நாட்களில் (23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை) திருச்சி சரகத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆடு திருட்டு சம்பந்தமாக மொத்தம் 12 வழக்குகள் (திருச்சி -3, புதுக்கோட்டை - 8, கரூர்- 1) பதிவு செய்யப்பட்டு 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் மதிப்புள்ள 60 ஆடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் ஆடு திருடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க திருச்சி சரக தனிப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 29 Nov 2021 1:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  2. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  4. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  5. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  6. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  7. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  8. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  9. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...