/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் போக்சோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர்  போக்சோவில் கைது
X

பைல் படம்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விஜி (எ) மெல்வின் அர்னால்டு (வயது 26). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று போதையில் இருந்த மெல்வின் அர்னால்டு திடீரென ஒரு வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சிறுமி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த மெல்வின் அர்னால்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மெல்வின் அர்னால்டு அடிக்கடி போதையில் இதுபோன்று நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மெல்வின் அர்னால்டை நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 March 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு