/* */

திருச்சி நகரில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அவலம்

திருச்சி மாநகரில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அவல நிலை உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி நகரில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அவலம்
X

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோடு ஆசாத் தெரு பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குடிசைப்பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வீடுகளில் மழைநீர் புகும் நிலை உள்ளது.

மேலும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரத்தில் தண்ணீரில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் திருச்சி அம்பிகாபுரம், பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Updated On: 24 Nov 2021 7:49 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!