/* */

திருச்சியில் அடகு கடையின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருச்சி கோட்டை பகுதியில், அடகு கடையின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் அடகு கடையின் பூட்டை உடைத்து நகை திருட்டு
X

 நகை அடகுக்கடையில் திருடு போனது.

திருச்சி வயலூர் ரோடு அம்மையப்பா நகர் ஆனந்தம் நகரின் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஸ்ரீதர் (வயது 36). இவரும், இவரது தம்பியுமான ஸ்ரீ ராம் (வயது 32) ஆகியோர், கடந்த ஆறு வருடங்களாக திருச்சி கோட்டை பகுதியில் உள்ள நடு குஜிலி தெருவில், ஸ்ரீ கோல்டு பைனான்ஸ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்கள்.

நேற்று இரவு 9 மணிக்கு அடகு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர், இன்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த அடகு பிடித்த நகைகள் 22 கிராம் மற்றும் 150 கிராம் வெள்ளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில், கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!