/* */

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.

HIGHLIGHTS

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் தமிழ்நாடு ஓட்டல் எதிரே உள்ள சாலையில் நடந்து சென்றவர் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தவர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவலறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்தவர் திருச்சி மாவட்டம் பூலான்குளத்துப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த திருப்பதி (வயது 50) என்பது தெரியவந்தது. இதையடுத்து தகவலின் பேரில் திருப்பதி மனைவி புண்ணியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து திருப்பதி மீது மோதிய வாகனம் எது என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 Jan 2022 10:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  2. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  3. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  7. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  8. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்