/* */

சங்கிலியாண்டபுரத்தில் கிணற்றில் பெண் சடலம் மிதந்ததால் பரபரப்பு

திருச்சி அருகே, சங்கிலியாண்டபுரத்தில் கிணற்றில் பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

சங்கிலியாண்டபுரத்தில் கிணற்றில் பெண் சடலம் மிதந்ததால் பரபரப்பு
X

குப்பம்மாள்

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 98). அந்த பகுதியில் தனியாக வசித்து வந்த இவர், காலையில் இருந்து நீண்ட நேரமாக காணவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினரை, அவரை தேட தொடங்கினர். அப்போது, குப்பம்மாள் வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் சடலம் ஒன்று மிதந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், பாலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விசாரணையில், கிணற்றில் மிதப்பது மூதாட்டி குப்பம்மாள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டடது. நிலைய அலுவலர் மெல்க்யூ ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மூதாட்டியின் உடலை கயிற்றின் உதவியுடன் மீட்டனர். திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மூதாட்டி, கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்யும் நோக்கத்தில் கிணற்றி தள்ளி விட்டார்களா என்று பல கோணங்களில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு