/* */

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் லஞ்சம் கொடுப்பதை தவிர்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் திருச்சியில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில், விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் பொதுமக்களிடையே லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்களை வைத்து நாடகங்களை நடத்தினர்.

முன்னதாக, சத்திரம் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்களுக்கு, கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு இசை நடனங்களும் நடத்தப்பட்டது. முன்னதாக லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பொதுமக்களிடம் வினியோகித்தனர். அப்போது பறை இசையுடன் விழிப்புணர்வு பரப்புரையில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

Updated On: 30 Oct 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  2. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  3. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  4. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  6. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  7. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  8. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  9. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  10. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?