/* */

திருச்சியில் சாலையோரத்தில் கிடந்த 20 மூட்டை கடத்தல் ரேஷன் அரிசி

திருச்சியில் சாலையோரத்தில் அனாதையாக கிடந்த 20 மூட்டை ரேசன் அரிசியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

திருச்சியில் சாலையோரத்தில் கிடந்த 20 மூட்டை  கடத்தல் ரேஷன் அரிசி
X

திருச்சியில் சாலையோரம் அனாதையாக கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றி சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனி பகுதியில் அரிசி மூட்டைகள் கிடப்பதாக செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ரோட்டோரத்தில் கிடந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றி அவை யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தினர். அந்த மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்த போது அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இது குறித்து உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசார் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த 400 கிலோ எடையிலான 20 மூட்டைகள் ரேஷன் அரிசியை கைப்பற்றி, அந்த இடத்திற்கு கொண்டுவந்து போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு