/* */

திருச்சி பாலாஜி நகர் விரிவாக்க பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு

திருச்சி காட்டூர் பாலாஜி நகர் விரிவாக்க பகுதி மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

திருச்சி பாலாஜி நகர் விரிவாக்க பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு
X

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி 62-வது வார்டு பகுதியை சேர்ந்தது ஸ்ரீ பாலாஜி நகர் விரிவாக்க பகுதி.இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் ஆங்காங்கு மூடப்படாமல் இருப்பதால் தற்போது அவற்றில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. ஆதலால் மாற்று பாதை அமைத்து தர வேண்டும் என கோரி மாநகராட்சி அதிகாரிகளை அப்பகுதி மக்கள் ஏற்கனவே சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் ஸ்ரீ பாலாஜி நகர் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் அதன் பொதுச்செயலாளர் பாஸ்கரன், முன்னாள் பொருளாளர் பரமநாதன் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். பொதுமக்கள் இடையூறு இன்றி வெளியில் சென்று வருவதற்கு வசதியாக மாற்று பாதை அமைத்து தர வேண்டும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Updated On: 8 Oct 2021 4:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!