/* */

திருவெறும்பூரில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் : 4 பேர் கைது

திருவெறும்பூரில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவெறும்பூரில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் : 4 பேர் கைது
X

வெளிமாநில மது பாட்டில்கள் (பைல் படம்)

பாண்டிச்சேரியிலிருந்து திருச்சி நோக்கி வரும் கார் ஒன்றில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் தலைமையிலான போலீசார் காட்டூர் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போதுகாட்டூர் கடை வீதியில் சந்தேகத்திற்கிடமான வந்த காரை நிறுத்தி வாகன தணிக்கை செய்த போது காரில் பயணித்தவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

போலீசார் விசாரணை செய்ததில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் வின் நகரை சேர்ந்த மதன்ராஜ், அண்ணா நகரை சேர்ந்த விக்கி, காட்டூர் ராஜவீதியை சேர்ந்த சுகன், எழில் நகரை சேர்ந்த அருண்குமார் ஆகிய நான்கு பேரும் பாண்டிசேரியிலிருந்து சுமார் 450 மது பாட்டில்கள் காரில் கடத்தி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்துதிருவரம்பூர் போலீசார் மதன்ராஜ், விக்கி, சுகன், அருண்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 450 மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 10 Jun 2021 4:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  3. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  4. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  5. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  6. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  7. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  8. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  10. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?