/* */

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா கஞ்ச நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னர்(வயது 27). இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த லாவண்யா (வயது 25) என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன் திருப்பூரில் வேலை பார்த்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வந்த இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக லாவண்யா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 குழந்தைகளும் தாய் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

Updated On: 10 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!