/* */

திருச்சி அருகே கல்லக்குடியில் சிமெண்ட் ஆலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சிமெண்ட் ஆலை தொழிலாளி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே கல்லக்குடியில் சிமெண்ட் ஆலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட பீட்டர்.

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள திண்ணகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பீட்டர் (வயது 50). இவர் தனியார் சிமெண்டு ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஜான்சிராணி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் மீண்டும் ஜான்சிராணி வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவு, ஜன்னல்கள் மூடியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பீட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 5 Jan 2022 10:04 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...