/* */

தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது
X

தூத்துக்குடியில் தனுஷ் நடித்த கா்ணன் படம் வெளியான சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள சினிமா தியேட்டரில் தனுஷ் நடித்த கா்ணன் திரைப்படம் கடந்த 9ம் தேதி திரையிடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் திரையரங்குக்கு படம் பார்க்க சென்ற இளைஞா்கள் சிலா் மது அருந்தியிருந்ததால் அவா்களை படம் பார்க்க அனுமதிக்காமல் திரையரங்கு நிர்வாகிகள் பணத்தை திரும்ப கொடுத்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞா்களில் சிலா் திடீரென தங்கள் பைக்கில் இருந்த பெட்ரோலை பாட்டில்களில் பிடித்து திரையரங்கு வளாகத்தில் வீசி விட்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து தென்பாகம் போலீசில் திரையரங்கு நிர்வாகத்தினா் அளித்த புகாரின் அடிப்படையில் திரையரங்கில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட தென்பாகம் போலீசார் பெட்ரோல் குண்டு வீசியதாக தூத்துக்குடி ராஜீவ்நகா் 3வது தெரு பகுதியை சார்ந்த மிக்கேல் அந்தோணி அரவிந்த் (21), அந்தோணி ராஜ் (20), மருதநாயகம் (19), சுகுமார் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

Updated On: 15 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!