Begin typing your search above and press return to search.
தூத்துக்குடி நகரில் அங்கன்வாடி மையங்களை திறந்தார் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி நகரில் மாநகராட்சி சார்பில் அங்கன்வாடி மையங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் மங்களாபுரம், திரேஸ்புரம், வி.வி.டி. பூங்கா மற்றும் வரதராஜபுரம் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.