/* */

தூத்துக்குடியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு: எஸ்பி பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” எனும் சமூக விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு: எஸ்பி பங்கேற்பு
X

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” எனும் சமூக விழப்புணர்வு நிகழ்ச்சி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல்.பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி" எனும் சமூக விழப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல்.பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், சமுதாயத்தில் இன்று உயர்ந்த நிலையில் இருக்கும் சாதனையாளர்கள் பலர் சிறு கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடையை திறமையே அவர்களை சாதனையாளர்களாக மாற்றியது. நீங்களும் உங்கள் திறமையை வளர்த்து கொண்டு சிறந்த சாதனையாளர்களாக இந்த சமுதாயத்தில் வளர வேண்டும். மேலும் பெண்கள் சமூக வலைதளத்தில் தேவையில்லாமல் தங்கள் புகைப்படங்கள் சுய விவரங்களை பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலமாக நமக்கே தெரியாமல் ஆபத்தில் நாம் சிக்கி கொள்ள நேரிடலாம். இதுபோன்ற செயல்களில் நீங்கள் மாட்டிக்கொள்ள நேர்ந்தால் தைரியமாக காவல்துறையிடம் புகாரளிக்க முன் வரவேண்டும். உங்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தனியாக சட்டம் உள்ளது. அதை பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதர வழிவகை உள்ளது. எனவே பெண்கள், மாணவிகள் சமூக வலைதளத்தை பயன்படுத்தும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். செல்போன்களை தேவைக்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

விளையாட்டில் எப்படி விதிமுறைகளை கடைபிடித்து விளையாடினால் கோல் அடிக்க முடியுமோ அதே போல் வாழ்க்கையிலும் சில விதிமுறைகளை கடைபிடித்து நமது குறிக்கோள்களை அடைந்தால் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும். அதே போன்று நீங்களோ உங்கள் குடும்பத்தார்களோ ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான குறுஞ்செய்திகள் மற்றும் ஆதாரமற்ற செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 380 பேர் விபத்தில் மரணமடைந்துள்ளனர்.

சாலையில் செல்லும்போது சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைகவசம் அணிதல், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் அணிதல் போன்ற விதிமுறைகளை பற்றி உங்கள் தந்தை மற்றும் சகோதரர்களிடம் நீங்கள் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். உங்கள் பாதுகாப்புக்கென்றே தமிழக அரசு 'காவல் உதவி" என்ற செயலியை உருவாக்கி உள்ளது. அதில் 100, 101, 112 போன்ற அவசர உதவி எண்கள், முதல் தகவல் அறிக்கை நிலை, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள், போலீஸ் சரிபார்ப்பு சேவைகள், வாகன சரிபார்ப்பு (திருடப்பட்ட/காணாமல் போன), இழந்த ஆவண அறிக்கை, காவல் நிலைய இருப்பிடங்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சேவை வசதிகள் உள்ளது. இதை மாணவிகளாகிய நீங்கள் உங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து உங்கள் ஆபத்து காலங்களில் பயன்படுத்தி உங்கள் பாதுகாப்பை காவல்துறை மூலம் உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் தனது உரையை நிறைவு செய்தார்.

Updated On: 28 April 2022 1:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா