Begin typing your search above and press return to search.
சட்ட விரோதமாக மது விற்ற 12 பேர் கைது
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 12 பேர் கைது : 373 மதுபாட்டில்கள், 5 லிட்டர் கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை தெர்மல் நகர் காவல் நிலையம், ஆறுமுகநேரி காவல் நிலையம், பசுவந்தனை காவல்நிலையம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 12 நபர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து மேற்படி காவல் நிலையங்களின் போலீசார் 12 வழக்குகள் பதிவு செய்து 12 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 373 மதுபாட்டில்கள், 5 லிட்டர் கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.