/* */

தூத்துக்குடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
X

தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் இரு சக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை வ.உ.சி கல்லூரி எதிரிலிருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றனர்.பேரணியானது பனிமயமாதா ஆலயம் முன்பு நிறைவடைந்தது. பின்னர் சாலையில் இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் சென்ற வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி., வழங்கினார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறுகையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது சாலை விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால் அவர்கள் ஹெல்மெட் அணியாத நிலையில் அவரது உயிருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Updated On: 3 Feb 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?