/* */

தூத்துக்குடியில் திடீர் மழை : பாதாள சாக்கடை குழிகளில் மழை நீர்

தூத்துக்குடியில் திடீர் மழை :- பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் தேங்கிய மழை வெள்ளத்தால் பணிகள் சுணக்கம்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் திடீர் மழை : பாதாள சாக்கடை குழிகளில் மழை நீர்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல சீதோஷ்ண நிலை இருந்து வருகிறது. இன்று அதிகாலை முதலே வானம் இருண்டு மழைக்கு அச்சாரமிட்டன. இந்நிலையில் 7 மணிக்கு தூறலாக தொடங்கிய மழை சிறிது நேரதத்திலேயே இடியுடன் கூடிய கனமழையாக வெளுத்து வாங்கியது. சுமார் அரை மணி நேரம் இடைவிடாது பெய்த கனமழையால் பூமி குளிர்ந்து வெப்பம் வெளியேறியது.


தூத்துக்குடி மாநகராட்சியில் பழைய மாநகராட்சி சாலை, காசுக்கடை பஜார், ரயில் நிலைய சாலை, திருச்செந்தூர் சாலை, பிரையன்ட் நகர், பிஅண்ட் டி காலனி, ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பல முக்கிய இடங்களிலும் கதிர்வேல் நகர், ராஜீவ் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. மாநகராட்சியின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டபணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு பள்ளமாகி கிடப்பதால் தண்ணீர் தேங்கி பணிகளில் சுணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மழை, மாவட்டம் முழுவதும் பரவலாக தற்போதும் பெய்து வருவதால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 8 May 2021 6:09 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  2. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  3. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  4. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  6. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  8. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  9. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!