/* */

கோவில்பட்டி இரும்புக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது

புதுக்கோட்டையை சேர்ந்த அஷ்ரப் அலி, கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த இம்ரான் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டி இரும்புக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது
X



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கணேஷ்குமார் இருவரும் சேர்ந்து கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே இரும்புக்கம்பி கடை நடத்தி வருகின்றனர்.

இந்த கடையில் கடந்த ஜீலை மாதம் 10ந்தேதி6 பேர் கொண்ட கும்பல் கடையின் இரும்பு தகடுகளை பிரித்து சுமார் 1 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள 2 டன் இரும்புக்கம்பிகள் மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து மேற்கு காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன், நல்லதம்பி, ராஜா, சரவணன் ஆகிய 4 பேரையும் கடந்த ஜீலை மாதம் 24ந் தேதி போலீசார் கைது செய்து 2லட்சத்து 25 ஆயிர ரூபாயை போலீசார் கைபற்றினர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய புதுக்கோட்டையை சேர்ந்த அஷ்ரப் அலி, கோபிசெட்டிபாளையத்தினை சேர்ந்த இம்ரான் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் தனிப்படையினர் இருவரையும் கைது செய்து 1லட்சத்து 50 ஆயிர ரூபாய் பணத்தினை பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On: 25 Aug 2021 12:31 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்