/* */

திருவாரூர் அருகே த.மு.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் அருகே அடியக்க மங்கலத்தில் நெடுஞ் சாலையை சரிசெய்ய கோரி த.மு.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே த.மு.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்
X

திருவாரூர் அருகே சாலை மறியல் செய்த த.மு.மு.க.வினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் அடியக்கமங்கலம் பகுதியில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் மேல் பகுதியில் போதிய ஜல்லி மற்றும் தார் இடப்படாததால் முழுமையாக சேதம் அடைந்து பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக பல விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளத்தை சரி செய்ய கோரி பலமுறை நெடுஞ்சாலை துறையிடம் வலியுறுத்தியும் இதுவரை சரி செய்யப்படவில்லை.

எனவே திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் த.மு.மு.க.வினர் ஈடுபட்டனர். அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலையை சரி செய்வதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகன போக்குவரத்து தடைப்பட்டது.

Updated On: 31 Oct 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...