Begin typing your search above and press return to search.
செம்மை நெல் சாகுபடி நாற்றுகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பார்வையிட்டார்
நீடாமங்கலத்தில் 30 ஏக்கரில் செம்மை நெல் சாகுபடி செய்ய தயாராகி வரும் நாற்றுகளை வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பார்வையிட்டார்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆதனூரில் தமிழ்பொழில் என்பவர் வயலில் சுமார் 30 ஏக்கரில் செம்மை நெல் சாகுபடி செய்யும் நாற்றுகளையும் பசுந்தாள் உரசாகுபடியினையும் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பார்வையிட்டார். பின்னர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் , நீடாமங்கலம் ஒன்றிய சேர்மன் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் .