/* */

திருவாரூரில் இரு தினங்களுக்கு முன் நகை கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருவாரூர் அருகே இரு தினங்களுக்கு முன் தம்பதியினரை தாக்கி 11 பவுன் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் இரு தினங்களுக்கு முன் நகை கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

நகை கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர்.

திருவாரூர் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரராகவன்(வயது51 )கட்டிட பொறியாளராக உள்ளார். இவரது மனைவி மேகலா (49) திருவாரூர் துர்கா சாலையிலுள்ள தையல் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பணி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அலிவலம் அருகே உள்ள சாலையில் மர்ம நபர்கள் 4 பேர் வாகனத்தை மறித்து வீரராகவனை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் மேகலா அணிந்திருந்த 11பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போனையும் பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.அவ்வழியே சென்றவர்கள் மீட்டு உடனடியாக வீரராகவனுக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வழக்கில் புதிய திருப்பமாக பழையவலம் கிராமத்தை சேர்ந்த நிவாஸ் என்பவருக்கும் செட்டியமூலை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் தகாத உறவு இருந்து வந்த நிலையில் அந்தப் பெண்ணுடன் வீரராகவனும் கள்ளதொடர்பில் இருந்துள்ளார்.

இதில் ஏற்பட்ட தகராறில் வீரராகவனை நிவாஸ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாக்க திட்டமிட்ட இருந்தார். இதன்படி நிவாஸ் மற்றும் அவரது நண்பர்கள் பழையவலம் கிராமத்தை சேர்ந்த ராஜா, ஓடாச்சேரியை சேர்ந்த அப்பு என்கிற மணிகண்டன், கொரடாச்சேரி அருகே உள்ள திருவிடைவாசல் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து வீரராகவனை இரவு வீடு திரும்பும் நேரத்தில் இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். வழக்கை திசைதிருப்பும் நோக்கில் வழிப்பறியில் ஈடுபட்டது போன்று நாடகம் நடத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்து நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On: 4 April 2022 12:39 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!