/* */

திருத்துறைப்பூண்டி அருகே சாராயம் கடத்தியவர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சாராயத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே சாராயம் கடத்தியவர் கைது
X

கொக்கவாடி அரக்கரை பகுதியில் பிடிபட்டசாராயத்தை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே கொக்கவாடி அரக்கரை வீரன் கோவில் பின்புறம் உள்ள இடுகாடு அருகில் பாண்டிசேரி சாராயம் விற்பனை செய்வதற்கு பைக்கில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், எஸ்எஸ்ஐ புஷ்பநாதன், காவலர்கள் பாலமுருகன், முத்துமணி ஆகியோர் அந்த வழியாக பைக்கில் சாக்குமூட்டை வைத்து கொண்டு வந்த நபரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், கொக்கலாடி மெயின்ரோடு கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெற்றிவேல்(51) என்பது தெரியவந்தது. பைக்கில் வைத்திருந்த வெள்ளைநிற சாக்கு மூட்டையை சோதனையிட்டதில் அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராயம் சுமார் 110 லிட்டர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சிறப்பு உதவி ஆய்வாளர் புஷ்பநாதன், காவலர் முத்துமணி ஆகியோர் கைது செய்து அவரிடமிருந்த 110 லிட்டர் பாண்டி சாராயத்தை கைப்பற்றி அங்கேயே கீழே ஊற்றி அழித்தனர்.



கொக்கவாடி அரக்கரை பகுதியில் சாராயம் கடத்தி வந்த வெற்றிவேல்.


Updated On: 6 March 2022 10:58 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?