Begin typing your search above and press return to search.
திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
அடிப்படை வசதி கோரி திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி, பேருந்து வசதி செய்து தர வேண்டும். மேலும் கல்லூரியில் கேன்டீன் வசதி செய்து தர வலியுறுத்தி இன்று கொருக்கை கடை வீதியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதனால் திருத்துறைப்பூண்டி -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.