Begin typing your search above and press return to search.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டாள் அலங்காரத்தில் பெருமாள்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பெருமாள் ஆண்டாள் அலங்காரத்தில் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் இராப்பத்து உற்சவத்தின் ஒரு பகுதியாக ஆண்டாள் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி அருள்பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசி முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது . ஆறாம் நாளான இன்று ராஜகோபாலசுவாமி ஆண்டாள் அலங்காரத்தில் கோவிலின் பல்வேறு பிரகாரங்கள் வழியாக வலம் வந்து சொர்க்க வாசல் கதவின் வழியாக கடந்து நந்தவனத்தில் எழுந்தருளினார். அப்போது ஆழ்வார்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது . கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.