/* */

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் நடவடிக்கை- வணிகர் சங்க பேரவை

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் நடவடிக்கை- வணிகர் சங்க பேரவை
X

தேனி மாவட்ட வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் செல்வக்குமார்.

தேனி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள், போதை பாக்கு விற்பனை செய்பவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என தேனி மாவட்ட வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் செல்வக்குமார் கூறுகையில், தேனி மாவட்ட வணிகர் சங்க பேரவையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் உள்ளனர். இவர்களில் யாரும் புகையிலை பொருட்கள், போதை பாக்கு உட்பட பொதுமக்களுக்கு கேடு தரும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அப்படி விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் அவர்கள் மீது எடுக்கும் சட்ட நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற வணிகர் சங்க பேரவை எந்த நடவடிக்கையும் எடுக்காது. இது குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 28 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்