/* */

கம்பத்தில் ரேஷன் அரிசிக்குள் கஞ்சா கடத்திச் சென்ற 2 வாலிபர்கள் கைது

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசிக்குள் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கம்பத்தில் ரேஷன் அரிசிக்குள் கஞ்சா  கடத்திச் சென்ற 2 வாலிபர்கள் கைது
X

பைல் படம்

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு அரசு பஸ்சில் ரேஷன் அரிசியில் மறைத்து வைத்து கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.

கம்பத்தில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப்பறக்கிறது. இதுவரை வந்த எந்த எஸ்.பி.,க்களாலும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.

தற்போதைய எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே இந்த வரிசையில் சேர்ந்துள்ளார். கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதை அடியோடு நிறுத்த வேண்டும்.

கஞ்சா விற்பனையைமுற்றிலும் தடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். கம்பம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்.ஐ., விஜய்ஆனந்த் கம்பத்தில் இருந்து கோம்பை செல்லும் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது கேரளாவிற்கு அரிசி கடத்திச் சென்ற ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி கம்பம் புதுப்பட்டி நாயக்கர் தெருவை சேர்ந்த சுந்தரம், 35, முத்துப்பாண்டி, 30 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் கேரளாவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திச் செல்பவர்கள். அரசு பஸ்சில் கடத்திச்செல்வார்கள்.

சாப்பிடத்தானே அரிசி கொண்டு செல்கின்றனர் என பல நேரங்களில் போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வழக்கம். ஆனால் இம்முறை (நேற்று இரவு) இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரியும், எஸ்.ஐ., விஜய்ஆனந்த் இருவரும் இவர்கள் கேரளாவிற்கு கொண்டு சென்ற ரேஷன் அரிசி மூடைகளை ஆய்வு செய்தனர்.

அதற்குள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து கம்பத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தடை விரைவில் முழுமையாக நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 Aug 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்