/* */

கல்லீரல் கோளாறை சரி செய்யும் துளசி தீர்த்தம் !

பெருமாள் கோயிலில் தரப்படும் துளசி தீர்த்தம் நிறைய நோய்களை தீர்க்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே

HIGHLIGHTS

கல்லீரல் கோளாறை சரி செய்யும் துளசி தீர்த்தம் !
X

பைல் படம்

பெருமாள் கோயிலில் தரப்படும் துளசி தீர்த்தம் நிறைய நோய்களை தீர்க்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் கோளாறுகளுக்கும் இந்த துளசி தீர்த்தம் நல்லதொரு மருந்தாக அமைகிறது.

மனிதனின் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு தேவையான ஐநூறுக்கும் மேலான செயல்களை செய்யும் ஒரே உறுப்பு கல்லீரல் மட்டுமே. அதேவேளையில், கெட்டுப் போனாலோ அல்லது சிதைந்தாலோ மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பும் கல்லீரல் மட்டும் தான்.

அதிக புகை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள், இரவில் அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்கள், அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு போன்றவை வர அதிக வாய்ப்பு உள்ளது.

துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி, அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் சரியாகி விடும்போது வேறு சில மூலிகைகள் கலந்த துளசி தீர்த்தம் எத்தனை வல்லமை வாய்ந்தது?

துளசி தீர்த்தம் செய்வது எப்படி? துளசி தீர்த்தம் செய்ய, 3 ஏலக்காய், பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை, துளசி இலைகள் 2 அல்லது 3 தேவைப்படும்.முதலில் ஏலக்காயை தட்டிக்கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ போன்றவற்றை கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்தால் துளசி தீர்த்தம் தயார்.இதனை அடிக்கடி குடித்து வந்தால், கல்லீரல், மண்ணீரல் தொடர்பான அத்தனை பிரச்னைகளும் தீர்ந்து விடும்.

Updated On: 18 Sep 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்