/* */

தேனியில் சமகவினர் ஆர்ப்பாட்டம் - மது விற்பனையை தடுக்க கோரிக்கை

தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே, அனுமதியற்ற மது விற்பனையை தடுக்கக்கோரி, சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

தேனியில் சமகவினர் ஆர்ப்பாட்டம் - மது விற்பனையை தடுக்க கோரிக்கை
X

தேனி கலெக்டர் அலுவுலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள்.

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின்னர் மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதியற்ற மது விற்பனை நடக்கிறது. குறிப்பாக மாவட்ட தலைநகரான தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் எதிரே, தனிநபர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் 24 மணி நேரமும் தடையின்றி மது விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சமத்துவ மக்கள் கட்சி சார்பில், வடக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெய்முருகேஷ் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.தேவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் அரசு பாண்டி, பால்பாண்டி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம்.ஜெயபெருமாள், சின்னமனுார் நகர இளைஞரணி செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் இதே கோரிக்கையினை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Updated On: 22 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு