Begin typing your search above and press return to search.
டூவீலர்- கார் மோதி விபத்து: கூடலுார் வாலிபர் பலி
கூடலுாரில் டூ வீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியனார்.
HIGHLIGHTS
தேனி மாவட்டம், கூடலுார் மேதகாரத்தெருவை சேர்ந்தவர் ராகவன், 37. இவர் தனது நண்பர் சுரேந்தர், 32 என்பவருடன் டூ வீலரில் கம்பம் நோக்கி பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பம் நோக்கி வந்த கார் டூ வீலர் மீது மோதியது.
இச்சம்பவத்தில் ராகவன் பலத்த காயமடைந்து இறந்தார். சுரேந்தர் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கூடலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.