/* */

பெரியகுளம் அருகே பலத்த காற்றுடன் மழை வாழை சேதம்

பெரியகுளம் அருகே பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் 50000த்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தது. விவசாயிகள் கவலையடைந்தள்ளனர்.

HIGHLIGHTS

பெரியகுளம் அருகே பலத்த காற்றுடன் மழை வாழை சேதம்
X

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சொக்கதேவன்பட்டி, சக்கரைபட்டி, சாவடிபட்டி, வடபுதுப்பட்டி, கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை விவசாயம் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் பெரியகுளம் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சொக்கத்தேவன்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் மழையினால் 2 கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேலான சுமார் 50ஆயிரம் வாழை மரங்கள் முற்றிலும் ஒடிந்து விழுந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி தான் வாழை விவசாயம் செய்து வந்தோம். பயிரிட்ட வாழை பிஞ்சு பருவம் மற்றும் பூவாக உள்ள நிலையில் சூறாவளி காற்றினால் முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலையை உரிய கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை