/* */

தேனியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தேனி சின்னமனுாரில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
X

பைல் படம்.

தேனி மாவட்டம், சின்னமனுாரில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.,) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை தொடங்கிய சோதனை மற்றும் விசாரணை தற்போது வரை தொடர்கிறது.

தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.,) போலீஸ் அதிகாரிகள் மதுரை, கன்னியாகுமரி களக்காடு, தேனி சின்னமனுார் ஆகிய இடங்களில் இன்று காலை ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் சின்னமனுாரில் பள்ளிவாசல் எதிரே உள்ள வடக்கு தெருவில் அமைந்திருக்கும் யூசுப் அஸ்லாம் என்பவரது வீட்டில் சோதனை நடக்கிறது. என்.ஐ.ஏ., டி.எஸ்.பி., ரோஜியா, இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மதுரையில் உள்ள பிரிவினைவாத சக்திகளுடன் யூசுப் அஸ்லாமுக்கு தொடர்பு உள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடக்கிறது.

இவரது வீட்டில் இருந்து மொபைல் போன், சிம்கார்டுகள், துண்டு பிரசுரங்கள், லேப்டாப் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 July 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!