ரேஷன் கடையை பூட்டி சீல் வைத்த குள்ளப்பகவுண்டன்பட்டி தலைவர்

தரமற்ற பொருட்களை எடை குறைவாக வழங்குவதாக புகார் கூறி ரேஷன் கடையை கூடலுார் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி தலைவர் சீல் வைத்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ரேஷன் கடையை பூட்டி சீல் வைத்த குள்ளப்பகவுண்டன்பட்டி தலைவர்
X

குள்ளப்பகவுண்டன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பொன்னுத்தாய்.

தேனி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் பொதுமக்கள் வசதிக்காக 7ம் நம்பர் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையில் மேற்கூரை சேதம் அடைந்ததால் தற்காலிகமாக சமூதாயக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. கடைக்கு வந்த ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் கடையை பூட்டி சீல் வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளும், வழங்கல் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் கூறியதாவது: ரேஷன் கடையில் தரமற்ற பொருட்கள் வழங்குவதாக மக்கள் எங்களிடம் புகார் கூறுகின்றனர். அரிசியை வெளி மார்க்கெட்டில் மூடை 600 ரூபாய்க்கு விற்று விடுகின்றனர். மக்களுக்கு தரமற்ற அரிசி அதுவும் எடை குறைவாக வழங்குகின்றனர். எண்ணெய், பருப்பு வகைகள் மிகவும் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

இது குறித்து பலமுறை நாங்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலன் இல்லை. இங்கு நாங்கள் வந்து பார்த்தோம். அரிசி மூடை எதுவும் இல்லை. இது எங்களின் சமுதாயக்கூடம். இங்குள்ள நல்ல அரிசியை விற்று விட்டனர். எனவே தரம் குறைந்த அரிசி மட்டும் உள்ளது. இதனை கடத்தி விடக்கூடாது என்பதற்காக வெல்டிங் வைத்து கதவை பூட்டி உள்ளோம் என்றார்.

Updated On: 30 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  4. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  5. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  6. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  7. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  8. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  10. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...