மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இன்ஸ்பெக்டர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இன்ஸ்பெக்டர்
X

மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இன்ஸ்பெக்டர்

கம்பத்தில் மாஸ்க் அணிந்து வந்த தொழிலாளர்களுக்கு இனிப்புகளை இன்ஸ்பெக்டர் வழங்கினார்.

கொரோனா இரண்டாம் அலையை தடுக்க தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீசார் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு ஏல தோட்ட வேலை செய்வதற்காக தினக்கூலியாக ஆயிரக்கணக்கானோர் ஜீப்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு வழியாக கேரளா மாநிலத்திற்கு ஜீப்களில் வேலைக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது தொழிலாளர்களிடையே கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். மேலும் மாஸ்க் அணிவதன் கட்டாயம் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் எடுத்துரைத்தார். இதில் வாகனங்களில் பயணம் செய்த தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் உள்பட 100 சதவீதம் அனைவரும் மாஸ்க் அணிந்து வந்திருந்தனர். தொழிலாளர்களின் விழிப்புணர்வை பாராட்டிய இன்ஸ்பெக்டர் சிலைமணி அவர்களுக்கு இனிப்பு வழங்கி மேலும் ஊக்கப்படுத்தினார்.

Updated On: 16 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  2. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  3. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  5. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  6. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
  7. காஞ்சிபுரம்
    வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி:...
  8. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  9. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு