/* */

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி. வேண்டு கோள்

ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமை அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி. வேண்டு கோள்
X

கொரோனா 2 வது அலை பரவல் காரணமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது, இந்நிலையில் 2-வது நாளான இன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திடீரென ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர், இரவு பத்து மணிக்கு பிறகு வெளியில் வந்த நபர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர், இரவு ஊரடங்கின் போது வெளியில் வரும் நபர்கள் இரண்டு நாட்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதன் பிறகு வரும் நாட்களில் இரவு நேரத்தில் வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமைகளில் அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூட கூடாது எனவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

Updated On: 22 April 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!