/* */

தஞ்சாவூர் அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி தஞ்சை அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை
X

தஞ்சாவூர் பெரிய கோவிலின் பின்புறம் உள்ள இடத்தில் யோகா தின ஒத்திகை நடைபெற்றது

சர்வதேச யோகா தினம் ஜுன் 21 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்திய அஞ்சல் துறை சார்பில் 100 இடங்களில் அஞ்சல் ஊழியர்கள் யோகா செய்ய உள்ளனர். இதையொட்டி தமிழகத்தில் சென்னை, மகாபலிபுரம், கன்னியாகுமரி, மதுரை, கோவை, தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் இன்று யோகாசன விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழரின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவிலின் பின்புறம் உள்ள இடத்தில் யோகா தின ஒத்திகை நடைபெற்றது.

இதில் திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் ரவீந்திரன், தஞ்சை கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் தஞ்சை கோட்டத்தை சேர்ந்த அஞ்சலக ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற யோகா குழுவினர் யோகா கற்றுக் கொடுத்தனர். யோகாசனம் செய்வதால் உடல் வலிமை பெறும், நோய்கள் அண்டாது, மன புத்துணர்ச்சி அடையும் இன்னும் பல்வேறு நன்மைகள் உள்ளன. முறைப்படி தினமும் யோகா செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் ‌ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 25 April 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!