/* */

தஞ்சை பெரியகோவில் அருகே பொம்மைக்கடை வியாபாரி குத்திக்கொலை

தஞ்சை பெரியகோவில் அருகே பொம்மைக்கடை நடத்தி வந்த வியாபாரி குத்திக்கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தஞ்சை பெரியகோவில் அருகே பொம்மைக்கடை வியாபாரி குத்திக்கொலை
X

சரவணன்

தஞ்சாவூர் கீழவாசல் குயவர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (53). இவர் பெரியகோயில் பகுதியில் பொம்மை கடை நடத்தி வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் குமரவேலு (56). இவருடம் சரவணன் ரூ.25,000 வட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது. பணம் பெற்று நீண்ட நாட்கள் ஆகியும் அசலும், வட்டியும் சரவணன் கொடுக்கவில்லை எனத்தெரிகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இந்த கடன் பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என, சரவணனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் குமரவேலு. அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால், சரவணை குமரவேலு மற்றும் அவரது மகன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து குத்தியுள்ளனர். படுகாயமமடைந்த சரவணனி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து குமரவேல், அவரது மகன் மற்றும் நண்பர்களை உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். இது, தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 21 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  3. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  5. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...
  6. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!