மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டைஅழகிரி பிறந்தநாள்: அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை
Language War Martyr Pattukottai Alagiri Birthday Collector Honors on behalf of the Government
HIGHLIGHTS
மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாவட்டஆட்சித் தலைவர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம், மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகஅரசின் சார்பில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அன்னாரின் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி தியாகஉணர்வை பறைசாற்று ம்வகையில் பட்டுக்கோட்டையில் அன்னாரின் நினைவு மணிமண்டபம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. மொழிப்போர்தியாகி அழகிரிசாமி 122வது பிறந்தநாள் விழா செய்திமக்கள் தொடர்புத் துறைசார்பில் கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தமிழக அரசின் சார்பில் மொழிப்போர் தியாகி அழகிரிசாமியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதிபாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பையா, வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், நகரமன்ற தலைவர் சண்முகப்பிரியாசெந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, உதவிசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கார்த்திக் ராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன், தியாகி அழகிரிசாமி, பேரன் சுப்பையாராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.