Begin typing your search above and press return to search.
வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல்: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய 4 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய 4 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே மகிமாலை கீழத்தெருவை சேர்ந்த மணி என்பவரின் மகன் கார்த்திக் (36). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத 4 பேர் வந்துள்ளனர். தொடர்ந்து அந்த 4 பேரும் சேர்ந்து கார்த்திக்கை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த கார்த்திக் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கரிகாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்கிய மர்மநபர்கள் யார்? எதற்காக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.