Begin typing your search above and press return to search.
ம.நடராசனின் நான்காம் ஆண்டு நினைவு நாள். சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி
புதிய பார்வை முன்னாள் ஆசிரியர் ம.நடராஜன் நான்காம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி
HIGHLIGHTS
புதிய பார்வை முன்னாள் ஆசிரியர் ம.நடராஜன் நான்காம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி.
தஞ்சாவூர் விளார் அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள உள்ள மா.நடராஜனின் நினைவிடத்தில், அவரது நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வி.கே.சசிகலா நடராசனின் நினைவிடத்தில் தீபம் ஏற்றி, மலர் தூவி அவரது புகைப்படத்திற்கு ஏலக்காய் மாலை அணிவித்து கோ பூஜை செய்தார். அவருடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் சகோதரர் ராஜா மற்றும் நடிகை சிஆர்.சரஸ்வதி, முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.